Tuesday, October 24, 2006

யானை

பேரரசர்களைப் பெரும் போர்களில்
வெற்றி கொண்ட யானை
ஒற்றை ரூபாய்க் காசு
வாங்கி ஆசி தருகிறது
இந்தக் கவிதை படிக்கும்
உன் பாராட்டுக்காக
வார்த்தை வளைக்கும் என்னைப் போல.