Wednesday, February 11, 2009

இரு சம்பளக்காரர்கள்

அலுவலக நேரத்தின் மத்தியில்
ஆதரவாய் இரு வார்த்தை பேச
அவள் அழைக்கையில்
இவனுக்கு நேரமில்லை
இவன் அழைக்கையில்
அவளுக்கு நேரமில்லை.
எண்களும் எழுத்துக்களும்
விட்ட பின் வீட்டுக்கு வந்தால்
அயர்ச்சி, அசதி, அரைகுறை உறக்கம்.
இவ்வாறு இனிதே கழிகிறது
இரு சம்பளக் குடும்பக்காரர்களின்
இல்லற வாழ்க்கை.

0 Comments:

Post a Comment

<< Home